நாடாளுமன்ற பிரவேச வீதிகளை e1651731107689
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் போராட்டத்தையடுத்து நாடாளுமன்ற நுழைவு வீதிகள் மூடல்!

Share

நாடாளுமன்ற நடவடிக்கைகளை இடையூறு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அதனைச் சுற்றியுள்ள பல வீதிகள் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளன.

இதன்படி, தியத்த உயன சந்தியில் இருந்து (பொல்துவ சந்தி) ஜயந்திபுர சந்தி வரையும், ஜயந்திபுர சந்தியில் இருந்து கியன்ஹாம் சந்தி (டென்சில் கொப்பேகடுவ வீதி) வரையும் நாடாளுமன்ற பிரவேச வீதிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகள் காரணமாக, நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள வீதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதனால், எவ்வித இடையூறும் இன்றி நாடாளுமன்றத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால், குறித்த வீதிகள் இரு நாட்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நாடாளுமன்ற வீதிக்குச் செல்லும் குறுக்கு வீிதிகளும் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும். மாற்று வழிகள் இல்லாத அந்த எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திப் பயணிக்க முடியும் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற நுழைவு வீதிகள் மூடப்பட்டுள்ளதால் பத்தரமுல்லையைச் சூழவுள்ள வீதிகளில் இன்று கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, பெலவத்த மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வாகன நெரிசல் நிலவுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...