நாடாளுமன்ற பிரவேச வீதிகளை e1651731107689
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் போராட்டத்தையடுத்து நாடாளுமன்ற நுழைவு வீதிகள் மூடல்!

Share

நாடாளுமன்ற நடவடிக்கைகளை இடையூறு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அதனைச் சுற்றியுள்ள பல வீதிகள் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளன.

இதன்படி, தியத்த உயன சந்தியில் இருந்து (பொல்துவ சந்தி) ஜயந்திபுர சந்தி வரையும், ஜயந்திபுர சந்தியில் இருந்து கியன்ஹாம் சந்தி (டென்சில் கொப்பேகடுவ வீதி) வரையும் நாடாளுமன்ற பிரவேச வீதிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகள் காரணமாக, நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள வீதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதனால், எவ்வித இடையூறும் இன்றி நாடாளுமன்றத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால், குறித்த வீதிகள் இரு நாட்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நாடாளுமன்ற வீதிக்குச் செல்லும் குறுக்கு வீிதிகளும் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும். மாற்று வழிகள் இல்லாத அந்த எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திப் பயணிக்க முடியும் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற நுழைவு வீதிகள் மூடப்பட்டுள்ளதால் பத்தரமுல்லையைச் சூழவுள்ள வீதிகளில் இன்று கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, பெலவத்த மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வாகன நெரிசல் நிலவுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...