33 10
இலங்கைசெய்திகள்

நீண்ட காலமாக நண்பிகளான ஒன்றாக வாழ்ந்த பெண்கள் மரணம்

Share

நீண்ட காலமாக நண்பிகளான ஒன்றாக வாழ்ந்த பெண்கள் மரணம்

களுத்துறையில் இரண்டு நண்பிகள் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குத்தாரிப்புவ கிராமத்தில் 14 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இரு நண்பிகள் வீட்டில் ஒன்றாக தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அப்சரா செவ்வந்தியும் அவரது மிகவும் நெருக்கமான தோழியான லலிதா உபமாலியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இருவரும் திருமணமாகாதவர்கள் மற்றும் 52 மற்றும் 49 வயதுடையவர்களாகும்.

உயிரிழந்த லலிதா உபமாலி கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் இந்த வீட்டில் அப்சரா செவ்வந்தியுடன் வாழ்ந்து வருகின்றார்.

இருவரும் சிறந்த தோழிகளாகும். உயிரிழந்த அப்சரா செவ்வந்தியின் பெற்றோர் நேற்று இரவு விகாரைக்கு பூஜைக்காக அழைத்ததாக அவரது தந்தை எட்மண்ட் ஜயசிங்க தெரிவித்தார்.

எனினும் இருவரும் வராத நிலையில் வீட்டிற்கு சென்று பார்த்த போது இருவரும் அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...

241009 Diego Garcia Tamils
அரசியல்இலங்கைசெய்திகள்

டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை உறுதி: பிரித்தானியாவுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்கும் நெருக்கடி!

இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாக...

Screenshot 2025 12 18 075235
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச அறிவிப்புகள் சிங்களத்தில் மாத்திரம்: தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! – ஜனாதிபதிக்கு சம உரிமை இயக்கம் கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து...