24 6620784474160
இலங்கைசெய்திகள்

இலங்கை – இஸ்ரேலுக்கு இடையில் முறுகல் நிலை

Share

இலங்கை – இஸ்ரேலுக்கு இடையில் முறுகல் நிலை

இஸ்ரேலில் (Israel) இருந்து இலங்கைக்கான விமானங்களை இஸ்ரேல் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இலங்கைக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னர், இஸ்ரேலில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்காக வரவிருந்த விமானம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆர்க்கியா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான I Z 639 என்ற விமானம் இலங்கையில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்காக கட்டுநாயக்கவிற்கு வரவிருந்தது.

இஸ்ரேலில் இருந்து சீஷெல்ஸ் தீவுகளுக்குச் செல்லும் இந்த விமானம் இந்தியாவில் இருந்து சிறப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்புக் காவலர்களுடன் நாட்டிற்கு வந்து விமான முனையத்தில் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விமானத்தில் பயணிகள் ஏற்றப்படுவார்கள்.

இந்த விமானம் வந்து புறப்படும் வரை, எந்த ஒரு அங்கீகரிக்கப்படாத நபரும் அதை அடைய முடியாது, மேலும் அதில் நுழையும் பயணிகள் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பு மூலம் திரையிடப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைக்கு இலங்கையில் உள்ள விமானப் பொறியாளர்களும் இந்த கடுமையான ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இஸ்ரேலில் தாதியர் உட்பட வேலைக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு இந்த விமானத்தின் வருகை மிகவும் வசதியாக இருந்தாலும், விமானங்கள் நிறுத்தப்பட்டதால் flydubai மூலம் இஸ்ரேல் சென்ற 40 பேர் டுபாயில் நிற்கதித்குள்ளாகியுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

விமான அட்டவணைக்கமைய, இஸ்ரேல் I Z 639 ரக விமானம் நேற்று சீஷெல்ஸ் ஊடாக இலங்கை திரும்புவதற்கான இலக்கைக் காட்டிய போதிலும் அது நடக்கவில்லை என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
574922858 1463456808471913 8345646138916257300 n
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா நிவாரணம்: இதுவரை 3 இலட்சம் வீடுகளுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கீடு!

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபாய் ஆரம்பக் கொடுப்பனவு, இதுவரை...

image b726ec86c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டன் – டிக்கோயாவில் அனைத்து கட்டுமானங்களுக்கும் உடனடித் தடை: மீறினால் கடும் நடவடிக்கை!

‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, ஹட்டன்-டிக்கோயா நகர சபை...

25 687ca2a2564c6
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ல் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி!

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கொள்கையல்ல என பிரதமர் ஹரிணி...

gen z and workplace boundaries ai image
செய்திகள்இந்தியா

‘Gen Z’ பணியாளர்கள் மத்தியில் பரவும் ‘மௌன விலகல்’!

இந்தியாவின் தற்போதைய இளம் பணியாளர்கள் (Gen Z) மத்தியில் ‘மௌன விலகல்’ (Silent Resignation) அல்லது...