20 12
இலங்கைசெய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வாகன சர்ச்சை: விசாரணையில் சிக்கிய மகிந்தவின் சகா!

Share

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வாகன சர்ச்சை: விசாரணையில் சிக்கிய மகிந்தவின் சகா!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குறிய வாகன மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் டாக்சி அபே’ என்றழைக்கப்படும் காமினி அபேரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் பணிப்பாளராக பணியாற்றிய காமினி அபேரத்ன, கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என கூறப்பட்ட சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்ட காரை கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த கார் பதிவு செய்யப்படாமையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த தனியார் ஹோட்டலின் வாகனம் நிறுத்துமிடத்தில், ‘டபிள்யூபி சி 24-0430’ என்ற எண் கொண்ட கறுப்பு நிற BMW கார் சந்தேகத்திற்கிடமான முறையில் நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில், கடந்த 10 ஆம் திகதி முதல்(10.10.2024) விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த விசாரணைக்கு அமையவே காமினி அபேரத்ன தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் காமினி அபேரத்ன வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காமினி அபேரத்ன குறித்த தனியார் ஹோட்டலில் சில காலமாக தங்கியிருந்ததாகவும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் இந்த கார் ஹோட்டலின் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என பி. எம்.டபிள்யூ. கார் உதிரி பாகங்களில் இருந்து ஒருங்கிணைப்பு செய்யப்பட்டமை தெரியவந்தது.

கார் பதிவு செய்யப்படவில்லை என்றும், அது போலி எண் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த காரில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான ஆவணங்களையும் இரகசிய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்த போதிலும், சுகயீனமுற்றிருப்பதால் பின்னர் வந்து வாக்குமூலம் வழங்குவதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு எதிரான பயணத்தடையை பெற்றுக்கொள்ளவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...

Vithiya
இலங்கைசெய்திகள்

வித்தியா கொலை வழக்கு: சுவிஸ் குமார் உட்பட 7 பிரதிவாதிகள் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தி, கூட்டுப்...