2 12
இலங்கைசெய்திகள்

டயனா கமகேவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஏழு குற்றச்சாட்டுக்கள்

Share

டயனா கமகேவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஏழு குற்றச்சாட்டுக்கள்

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக குற்ற விசாரணைப் பிரிவினர் ஏழு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் போலி தகவல்களை வழங்கியமை, போலிய ஆவணங்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை, குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுடைய டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது எனக் கூறி சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் டயனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த நிலையில், ஏனைய குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கிய குற்றப் பத்திரிகை ஒன்றை குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.

இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...