25 683916dd2b9f9
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு படையெடுத்துள்ள சீன முதலீட்டாளர்கள்! ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர்

Share

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று(29.05.2025) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் சீன முதலீட்டாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வாங் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும், ஜனாதிபதி திசாநாயக்கவின் நிர்வாகத்தால் பின்பற்றப்படும் தெளிவான கொள்கையையும் கருத்தில் கொண்டு, இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் சீன அமைச்சருடன் 100க்கும் மேற்பட்ட சீன முதலீட்டாளர்கள் இந்த பயணத்தின்போது, இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...