25 683916dd2b9f9
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு படையெடுத்துள்ள சீன முதலீட்டாளர்கள்! ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர்

Share

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று(29.05.2025) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் சீன முதலீட்டாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வாங் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும், ஜனாதிபதி திசாநாயக்கவின் நிர்வாகத்தால் பின்பற்றப்படும் தெளிவான கொள்கையையும் கருத்தில் கொண்டு, இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் சீன அமைச்சருடன் 100க்கும் மேற்பட்ட சீன முதலீட்டாளர்கள் இந்த பயணத்தின்போது, இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...