tamilni 180 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் குரங்கு இறக்குமதி தொடர்பில் சீனா நிலைப்பாடு

Share

இலங்கையிலிருந்து குரங்குகளை இறக்குமதி செய்வதில் சீனா இன்னும் ஆர்வம் காட்டுவதாக விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு நேற்றைய தினம் (09.01.2024) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“என்னுடைய சமீபத்திய சீன விஜயத்தின் போது அங்கிருந்த தனியார் மிருகக்காட்சி சாலைகள் இலங்கையிடம் இருந்து குரங்குகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டின.

சீனா முழுவதும் ஏறத்தாழ 20,000 மிருகக்காட்சி சாலைகள் காணப்படுவதோடு கண்காட்சிக்காக குரங்குகளை பயன்படுத்தும் நோக்கிலேயே சீன அரசாங்கம் குரங்குகளை இறக்குமதி செய்கிறது.

ஆனாலும், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளால் அரசாங்கத்திற்கு குரங்கு ஏற்றுமதி செயற்பாடுகளை முன்னகர்த்த முடியாதுள்ளது.

மேலும், நாட்டில் ஒரு வருடத்தில் 700 மில்லியன் தேங்காய் உள்ளிட்ட பயிர்கள் குரங்குகளால் நாசமாகின்றன” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...