25 684a7d0b868e7
இலங்கைசெய்திகள்

மனைவியின் மீது சந்தேகம்! தீ வைத்துக் கொளுத்திய கணவன்

Share

சிலாபம் – அம்பகண்டவில பகுதியில், கணவன் ஒருவர் தனது மனைவியை தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடுமையான காயங்களுக்கு உள்ளான மனைவி சிலாபம் வைத்தியசாலையில் சில நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றையதினம்(11) உயிரிழந்துள்ளார்.

தனது மனைவிக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் கொண்ட கணவர் இவ்வாறு மனைவியை தீ வைத்துக் கொளுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த கணவர் நேற்றையதினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 76
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து: எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு, இலங்கை...

world 70
செய்திகள்இந்தியா

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக...

world 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு கூடுதல் உர மானியம்: அமைச்சர் சமந்தா வித்யரத்ன

இலங்கையில் உள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிகமாக 5,000 ரூபாய் உர மானியம் வழங்க...

world 74
செய்திகள்உலகம்

காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ: உலகளவில் காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

காலநிலை மாற்றம் மற்றும் ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வுகளால் இந்த ஆண்டு ஆப்பிரிக்கா,...