rtjy 106 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பல் சொத்தையால் பாதிக்கப்படும் சிறுவர்கள்

Share

இலங்கையில் பல் சொத்தையால் பாதிக்கப்படும் சிறுவர்கள்

இலங்கையில் ஐந்து வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களில் சுமார் 48 வீதமானோர் பல் சொத்தையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பல் மருத்துவ நிறுவனத்தின் பல் சத்திரசிகிச்சை நிபுணர் சம்பா சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய வாய்வழி சுகாதார அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில், அதே வயதுடைய குழந்தைகளில் சுமார் 63 சதவீதம் பேர் பல் சொத்தையால் பாதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குழந்தைகளை பல் மருத்துவமனைகளுக்கு அடிக்கடி அழைத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோவிட் தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் பல் மருத்துவமனைகள் மூடப்பட்டமை மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை ஆகியவை குழந்தைகளின் வாய் ஆரோக்கியத்தின் வீழ்ச்சிக்கு பங்களித்ததாக மருத்துவர் சேனநாயக்க கூறியுள்ளார்.

அத்துடன் வாய் சுகாதாரத்தை பராமரிப்பதில் பெற்றோரின் அலட்சியமும் குழந்தைகளின் வாய் ஆரோக்கியம் குறைவதற்கு பங்களித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் குழந்தைகள் ஒரு வருடமாக இருக்கும் போது தோன்றும் புதிய பால் பற்கள், அவர்களுக்கு வயது வந்தோருக்கான பற்கள் தோன்றும் வரை, அவற்றை பாதுகாக்க பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...