24 66179e5949742
இலங்கைசெய்திகள்

தந்தையால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள்

Share

தந்தையால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள்

திருகோணமலை (Trincomalee) தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு பிள்ளைகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிள்ளைகளின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் முகமது சனுஷ் என்ற 28 வயதுடைய நபரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் 2 பிள்ளைகளையும் தனது கணவனின் கண்காணிப்பில் விட்டுச் சென்றுள்ள போதே இரு சிறுவர்களும் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு சிறுவர்களிடமும் வாக்குமூலம் பெற்றதை அடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த தந்தையால் தவறான நடத்தைக்குட்பட்ட இரண்டு சிறுவர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...