24 66179e5949742
இலங்கைசெய்திகள்

தந்தையால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள்

Share

தந்தையால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள்

திருகோணமலை (Trincomalee) தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு பிள்ளைகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிள்ளைகளின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் முகமது சனுஷ் என்ற 28 வயதுடைய நபரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் 2 பிள்ளைகளையும் தனது கணவனின் கண்காணிப்பில் விட்டுச் சென்றுள்ள போதே இரு சிறுவர்களும் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு சிறுவர்களிடமும் வாக்குமூலம் பெற்றதை அடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த தந்தையால் தவறான நடத்தைக்குட்பட்ட இரண்டு சிறுவர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...