tamilni 241 scaled
இலங்கைசெய்திகள்

இராணுவ புலனாய்வாளர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

Share

இராணுவ புலனாய்வாளர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

அண்மையில் அநுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த உத்திக பிரேமரத்ன என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளனர். யார் சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள்? அவர்களுக்கு அந்த துப்பாக்கி எங்கிருந்து வந்தது? என்ற கேள்விக்கு பொறுப்புடைய அமைச்சர் பதில் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 19.09.2023 இடம்பெற்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

கடந்த ஞாயிற்றுக் கிழமை 17ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அண்ணன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் ஊர்தியூடாகச் சென்ற போது இராணுவ புலனாய்வாளர்களது முன்னிலையில் குறிப்பிட்ட ஒருசிலரால் தாக்கப்பட்டுள்ளார். மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அதை ஏன் பொலிஸார் தடுக்கவில்லை என்ற ஒரு கேள்வி இருக்கின்றது.

இன்றுவரை ஏன் அந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் இருக்கின்றது. இதனை மிகவும் ஒரு கண்டிப்புடன் இந்த சபையில் பதிவு செய்கின்றேன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாரின் முன்னிலையில் தாக்கப்பட்டுள்ளார். இது உண்மையாக எங்களது மக்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே இது இருக்கின்றது.

அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இதனை தீர்ப்பதற்குரிய வழிவகைகளை செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் இதனுடைய தொடர்ச்சி மிக மோசமானதாக இருக்கும். நாளடைவில் இன்னும் தாக்குதல்கள் அதிகரிக்கும்.

அண்மையில் அநுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த உத்திக பிரேமரத்ன என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளனர். யார் சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள்? அவர்களுக்கு அந்த துப்பாக்கி எங்கிருந்து வந்தது? என்ற கேள்விக்கு பொறுப்புடைய அமைச்சர் பதில் கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...