rtjy 61 scaled
இலங்கைசெய்திகள்

பிள்ளையானுக்கு உதவிய சிறையதிகாரி .. சனல் 4இல் வெளியான ஆதாரம்

Share

பிள்ளையானுக்கு உதவிய சிறையதிகாரி .. சனல் 4இல் வெளியான ஆதாரம்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் உதவியதாக அவரது முன்னாள் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையானுக்கு விசேட பிரபுக்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சனல் 4 ஊடகத்திற்கு வழங்கிய தகவல்களில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலையில் தம்மை சந்திக்குமாறு பிள்ளையான் தொலைபேசியில் அறிவித்தார். பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் நான் சில கடும்போக்குவாதிகளை சந்தித்தேன்.

இவர்களுக்கு உலகத்தில் நாட்டம் கிடையாது மரணத்தை தழுவ தயங்காதவர்கள் எனவும் பிள்ளையான் அவர்களை அடையாளப்படுத்தினார்.

அங்கு கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர், கருத்த உருவத்தைக் கொண்ட தாடியுடனான நபரை அழைத்து வந்தார். அவரே சைனி மௌவியாவார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் இந்த நபர்களே தொடர்புபட்டிருந்தனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலைத் தாக்குதலின் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் இதனை மேற்கொண்டவர்கள் தாம் சிறையில் சந்தித்தவர்கள் என்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன் போது பிள்ளையானை தொடர்பு கொண்ட போது “வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரு” என பிள்ளையான் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...