tamilni 170 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி

Share

சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி

இலங்கைக்கு எதிராக ஒலிபரப்பப்பட்டுள்ள சனல்– – 4 காணொளி தொடர்பில் பிரிட்டன் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சனல்– – 4 காணொளி தொடர்பாக அரசாங்க புலனாய்வு பிரிவு பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே முன்வைத்துள்ள முறைப்பாட்டிற்கிணங்க, பிரிட்டனின் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் பல இடங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில், சனல்-04 அலைவரிசை அண்மையில் காணொளியொன்றை வெளியிட்டு, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராக அதில் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.

தம்மால் இதற்கு முன்னர் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சிகளுடன் பதில் வழங்கப்பட்டுள்ள நிலையில், சனல்-04 அலைவரிசை மீண்டும் தன்னிச்சையாக தம்மை அசௌகரியத்துக்குட்படுத்தும் நோக்கில் இந்தக் காணொளியை வெ ளியிட்டுள்ளதாக சுரேஷ் சலே மேற்படி ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளார்.

அதற்கிணங்கவே, மேற்படி காணொளி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரிட்டனின் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த காணொளியை வெளியிடுவதற்கு முன்பதாக சனல்-04 அலைவரிசை கடந்த ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி சுரேஷ் சலேயிடம் இக்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை கேட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரிப்பதாகவும் மேற்படி சம்பவம் நடந்த காலத்தில், தாம் இலங்கையில் தங்கியிருக்கவில்லையென்றும் சுரேஷ் சலே அதற்கு மறுதினமே குறித்த தொலைக்காட்சி அலைவரிசைக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 36
விளையாட்டுசெய்திகள்

தடையின்மைச் சான்றிதழ் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நுவான் துஷார வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை...

Untitled 35
செய்திகள்உலகம்

“ஹோர்முஸ் நீரிணையை நீங்களே கைப்பற்றுங்கள்”: நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி அழைப்பு!

ஈரானுடனான போர் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிபொருள்...

Untitled 34
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத்...

Untitled 33
செய்திகள்உலகம்

எண்ணெய் சந்தையில் கடும் அதிர்ச்சி: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 106 டொலராக உயர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...