tamilnih 98 scaled
இலங்கைசெய்திகள்

சன்ன ஜயசுமண ஜனாதிபதியுடன் இணைத்துக்கொள்ள முயற்சி

Share

சன்ன ஜயசுமண ஜனாதிபதியுடன் இணைத்துக்கொள்ள முயற்சி

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

டலஸ் அழகப்பெரும தலைமையில் பொதுஜன பெரமுன அதிருப்தியாளர்கள் குழு, நிதஹஸ் ஜனதா சபாவை உருவாக்கிய போது சன்ன ஜயசுமணவும் அதில் உள்ளடங்கியிருந்தார்.

அதன் பின்னர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் சன்ன ஜயசுமண உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நிதஹஸ் ஜனதா சபாவை விட்டும் விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டது.

எனினும் அங்கு சிறுபான்மைக் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீன் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பு காரணமாக சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் சன்ன ஜயசுமணவை ஒதுக்கி நடக்கத் தலைப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள சன்ன ஜயசுமண தற்போது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலும் அரசாங்கத்திலும் இணைந்து கொள்வதற்கு தூதுவிடத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...