சந்திரிகா 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட சந்திரிகா வியூகம்! – பொதுவேட்பாளரைக் களமிறக்க முயற்சி

Share

2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து, பொதுவேட்பாளரைக் களமிறக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் ஈடுபட்டுள்ளார் எனத் தகவல் கசிந்துள்ளது.

சில எதிரணிகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான வியூகத்தை அவர் வகுத்து வருகின்றார் எனவும், இரகசியப் பேச்சுகள்கூட இடம்பெற்று வருகின்றன எனவும் தெரியவருகின்றது.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள அரசியல் பின்புலம் கொண்ட ஒருவரையே சந்திரிகா அம்மையார் இலக்குவைத்துள்ளார் எனவும், தமிழ் பேசும் மக்களின் ஆதரவைப் பெறும் வகையிலுமே அந்த நபரைச் சந்திரிகா, தெரிவுப் பட்டியலில் முன்னிலையில் வைத்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கு சந்திரிகா அம்மையாரே திரைமறைவில் காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருந்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...