25 19
இலங்கைசெய்திகள்

இரு முன்னாள் ஜனாதிபதிகளும் சஜித்தும் பொதுக் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை

Share

இரு முன்னாள் ஜனாதிபதிகளும் சஜித்தும் பொதுக் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து பொதுக் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து இந்த கூட்டணி அமைக்கப்பட உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பு இல்லத்தில் இது குறித்த சந்திபொன்று நேற்று நடைபெற்றுள்ளது.

பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று நிட்டம்புவ பகுதியில் வைத்து சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து நேற்றைய தினம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...