இலங்கைசெய்திகள்

அனுமதியின்றி பெயரை பயன்படுத்துவதாக சந்திரிக்கா குற்றச்சாட்டு

Share
3 1
Share

அனுமதியின்றி தமது பெயரை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்நாயக்கவிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் கதிரை சின்னத்தில் போட்டியிடும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள் தமது புகைப்படத்தை துண்டுப் பிரசூரங்களில் அனுமதியின்றி பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

லசந்த அலகியவன்ன மற்றும் சரண குணவர்தன ஆகியோரின் புகைப்படங்களுடன் தனது புகைப்படத்தையும் பிரசார நோக்கில் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

தமது பெயரையோ புகைப்படங்களையோ எந்தவொரு காரணத்திற்காகவும் பயன்படுத்த வேண்டாம் என கதிரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தனது அதிகாரபூர்வ கடிதத் தலைப்பில் இது தொடர்பிலான கடிதமொன்றையும் சந்திரிக்கா வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்துவதனை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், அது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...