7 6
இலங்கைசெய்திகள்

வெகுவிரைவில் அடுத்த தேர்தலுக்கு வாய்ப்பு

Share

எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் உத்தேசித்து வருகின்றது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் பிரதியமைச்சர் ருவன் செனரத் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போது மேற்கண்ட விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எந்தத் தேவையும் அரசாங்கத்துக்கு இல்லையென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சில சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றை சீர்படுத்தியவுடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிலித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பான சட்டச் சிக்கல்களை சீர்படுத்துவது தொடர்பில் தற்போதைக்கு பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....