rtjy 53 scaled
இலங்கைசெய்திகள்

பிள்ளையானை சிறையில் சந்தித்த மகிந்த

Share

பிள்ளையானை சிறையில் சந்தித்த மகிந்த

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த காலப் பகுதியில் தம்மை மகிந்த ராஜபக்ச சந்தித்தமைக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், சனல் 4 ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப் பதிவின் அடிப்படையில் தமது பெயர் தொடர்புபடுத்துகின்றமைக்கு எதிராக முறைப்பாட்டை பதிவு செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த இராஜாங்க அமைச்சர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் மரணிப்பதற்கு ஊக்குவித்த சில மதநிறுவனங்களும், அரசியல் சக்திகள், மற்றும் சர்வதேச சக்திகள் காணப்படுவதாகவும் அவர்களை காப்பாற்றவே அசாத் மௌலான போலி குற்றசாட்டுக்களை முன்வைக்கின்றார் என சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாடாளுமன்றில் இன்றைய தினம்(06.09.2023) தெரிவித்தார்.

அத்துடன் குறித்த குண்டுத்தாக்குதலை ஐ எஸ் அமைப்பினரே மேற்கொண்டனர் என அதன் தலைவர் தெரிவித்திருந்தார் எனவும் ஐ எஸ் அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் அவர்கள் உரிமை கோரியிருந்தனர் எனவும் கூறியிருந்தார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....