rtjy 53 scaled
இலங்கைசெய்திகள்

பிள்ளையானை சிறையில் சந்தித்த மகிந்த

Share

பிள்ளையானை சிறையில் சந்தித்த மகிந்த

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த காலப் பகுதியில் தம்மை மகிந்த ராஜபக்ச சந்தித்தமைக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், சனல் 4 ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப் பதிவின் அடிப்படையில் தமது பெயர் தொடர்புபடுத்துகின்றமைக்கு எதிராக முறைப்பாட்டை பதிவு செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த இராஜாங்க அமைச்சர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் மரணிப்பதற்கு ஊக்குவித்த சில மதநிறுவனங்களும், அரசியல் சக்திகள், மற்றும் சர்வதேச சக்திகள் காணப்படுவதாகவும் அவர்களை காப்பாற்றவே அசாத் மௌலான போலி குற்றசாட்டுக்களை முன்வைக்கின்றார் என சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாடாளுமன்றில் இன்றைய தினம்(06.09.2023) தெரிவித்தார்.

அத்துடன் குறித்த குண்டுத்தாக்குதலை ஐ எஸ் அமைப்பினரே மேற்கொண்டனர் என அதன் தலைவர் தெரிவித்திருந்தார் எனவும் ஐ எஸ் அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் அவர்கள் உரிமை கோரியிருந்தனர் எனவும் கூறியிருந்தார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...