4 49
இலங்கைசெய்திகள்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் உடைகள் குறித்து அரசாங்கத்தின் முடிவு

Share

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் உடைகள் குறித்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில்,”ஒரு நபரின் கலாசார அடையாளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் விதிமுறைகளை விதிக்க நாங்கள் தயாராக இல்லை.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட உடைகள் பயன்படுத்தப்படுவதாக பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்தால் மட்டுமே அத்தகைய முடிவு பரிசீலிக்கப்படும்.

இதுவரை, பொலிஸ் உட்பட பாதுகாப்பு நிறுவனங்கள், எந்தவொரு உடையும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எந்த முறைப்பாடும் அளிக்கவில்லை.

மேலும், அத்தகைய அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை, எனவே இந்த விடயம் பரிசீலனையில் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...