மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள்
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள்

Share

மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள்

இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு வட்டி வீதங்கள் ஒரே நேரத்தில் செயற்படுத்தப்படுவதால் வங்கி வைப்புக்கள் தொடர்பில் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வர்த்தக வங்கியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​இலங்கை மத்திய வங்கியால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள கொள்கை வட்டி விகிதங்கள் வங்கி வைப்புகளுக்கு 11 சதவீதம் மற்றும் கடன்களுக்கு 12 சதவீதமாகும்.

இந்த வட்டி விகிதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி கட்டாயப்படுத்தியுள்ளது.

இருந்த போதிலும்,நாட்டின் பாதுகாப்பான வைப்புத் தொகையாகக் கருதப்படும் திறைசேரி உண்டியல்கள் மீது 20 சதவீத வட்டியை மத்திய வங்கி செலுத்துகிறது.

இதன் காரணமாக வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வைப்புத்தொகையை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வங்கி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கி வட்டி தொடர்பில் மத்திய வங்கி இரண்டு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் 19 சதவீத வட்டி விகிதத்தில் கூட திறைசேரி உண்டியல்களை தேவையான தொகைக்கு விற்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் நாட்டின் வங்கி வட்டி விகிதங்கள் கண்டிப்பாக அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சில தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர வட்டி விகிதங்கள் 22 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...