24 6642ec9f04b66
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் விலையுயர்ந்த ஹோட்டலை கொள்வனவு செய்த இலங்கை நிறுவனம்

Share

பிரித்தானியாவில் விலையுயர்ந்த ஹோட்டலை கொள்வனவு செய்த இலங்கை நிறுவனம்

பிரித்தானியாவின் டெர்பியில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்று இலங்கை நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செயின்ட் மேரிஸ் கேட்டில் உள்ள தரம் வாய்ந்த இந்த ஹோட்டலை, டெடிகம குழுமத்தின்; ரஸ்மி டெடிகம மற்றும் பீட்டர் கரன் ஆகியோர் வெளியிடப்படாத தொகைக்கு கொள்வனவு செய்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு மறைந்த மகாராணி இரண்டாவது எலிசபெத் இந்த ஹோட்டலில் உணவருந்தியபோது அதன் தலைமை சமையல்காரருக்கு தமது தனிப்பட்ட நன்றியை தெரிவித்திருந்தார்.

இந்த ஹோட்டலில் 38 தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட படுக்கையறைகள் உள்ளன. இது ஒரு விக்டோரியன் சொத்து ஆகும், இது முன்பு ஒரு பொலிஸ் நிலையமாகவும், நகரசபை தலைமையகமாகவும் செயற்பட்டது.

2008 ஆம் ஆண்டில், முந்தைய உரிமையாளர்களான தி ஃபைனெஸ் கலெக்சன், இந்த கட்டிடத்தை கொள்வனவு செய்து ஹோட்டலாக மாற்றியது.

இலங்கையைத் தளமாகக் கொண்ட தாய் நிறுவனத்துடன் 2005 ஆம் ஆண்டு முதல் எட்டு ஹோட்டல்களைக் கொள்வனவு செய்துள்ள Lavendish Leisure நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட இரண்டாவது பிரித்தானிய ஹோட்டல் இதுவாகும்.

டெடிகம குழுமம் நிதிச் சேவைகள், நகைகள், இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி, ரியல் எஸ்டேட் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...