image 49cd6e92c2
இலங்கைசெய்திகள்

5 பேரைக் கடித்த பூனை திடீர் மரணம் – வெறிநாய்க்கடி அச்சத்தால் பரிசோதனைக்கு உடல்கள் அனுப்பப்பட்டுள்ளன!

Share

அம்பாறை மாவட்டம், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நகர மண்டப வீதியில், வீட்டில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரைக் கடித்த நிலையில் திடீரென இறந்த சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் வெறிநாய்க்கடி (Rabies) அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பூனை 5 பேரைக் கடித்த பின்னர் தலைமறைவாகி இருந்துள்ளது. நீண்ட தேடுதலுக்குப் பின்னர், அது இறந்த நிலையில் மீட்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக உடனடியாகச் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குறித்த பூனையை மீட்டுப் பரிசோதனை மேற்கொண்டனர்.

வெறிநாய்க்கடி நோய்த்தொற்று அபாயம் உள்ளதா என்பதைக் கண்டறிய, மேலதிகப் பரிசோதனைக்காக அப்பூனையின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அண்மையில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் பல பேரைக் கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் பதிவாகியிருந்தது.

கடித்த நாயின் மாதிரி அறிக்கை, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இனால் ‘Rabies positive’ என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அப் பிரதேசத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல் மற்றும் வளர்ப்பு நாய்கள், கட்டாக்காலி நாய்களுக்கு ARV (Anti-Rabies Vaccine) தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையில் இடம்பெற்ற இச்சம்பவம், மீண்டும் வெறிநாய்க்கடி நோய் குறித்த விழிப்புணர்வையும், தடுப்பு நடவடிக்கைகளையும் அவசியமாக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...