5 24
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் நாடொன்றிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வந்த அச்சுறுத்தல்

Share

புலம்பெயர் நாடொன்றிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வந்த அச்சுறுத்தல்

சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு நபரால் நடத்தப்படும் யூடியூப் சனல், தனக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe) தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த சனலுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறைப்பாடளித்துள்ளார்.

தனக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், தனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாகவும் மனுதாரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, முறைப்பாட்டில் கூகுள் நிறுவனத்தையும் பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளதுடன், குறித்த சனலுக்கு அந்த நிறுவனம் இணைய இடைத்தரகராக செயற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட V8 லேண்ட் க்ரூஸரை சேனசிங்க சொந்தமாக வைத்திருந்ததாகவும் பயன்படுத்தியதாகவும் சனல் குற்றம் சாட்டியுள்ளதாகவும் சேனசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சனலின் ஏனைய காணொளிகளில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை மற்றிலும் அவதூறானவை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...