இலங்கைசெய்திகள்

சிக்கினார் மற்றுமொரு முன்னாள் அமைச்சர்: தொடரும் விசாரணை

11 47
Share

முன்னாள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு (Piyankara Jayaratne) எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வழக்குகளானது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடர்புடைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மூலமாக 3,000 வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு ரூ.128,520 நஷ்டத்தை ஏற்படுத்தியமை, மாஹவெவ வீஹென நிறுவனத்திற்கு ரூ. 360,000 தொகையை செலுத்துமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகளைத் தூண்டி அந்த தொகையை இழக்க செய்தமை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளை சிலாபத்தில் உள்ள தேசிய சேமிப்பு வங்கியில் உள்ள ஒரு கணக்கில் ரூ. 494,000 தொகையை வரவு வைக்க தூண்டுவதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியமை என முன்னாள் அமைச்சருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...