11 47
இலங்கைசெய்திகள்

சிக்கினார் மற்றுமொரு முன்னாள் அமைச்சர்: தொடரும் விசாரணை

Share

முன்னாள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு (Piyankara Jayaratne) எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வழக்குகளானது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடர்புடைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மூலமாக 3,000 வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு ரூ.128,520 நஷ்டத்தை ஏற்படுத்தியமை, மாஹவெவ வீஹென நிறுவனத்திற்கு ரூ. 360,000 தொகையை செலுத்துமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகளைத் தூண்டி அந்த தொகையை இழக்க செய்தமை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளை சிலாபத்தில் உள்ள தேசிய சேமிப்பு வங்கியில் உள்ள ஒரு கணக்கில் ரூ. 494,000 தொகையை வரவு வைக்க தூண்டுவதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியமை என முன்னாள் அமைச்சருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...