11 47
இலங்கைசெய்திகள்

சிக்கினார் மற்றுமொரு முன்னாள் அமைச்சர்: தொடரும் விசாரணை

Share

முன்னாள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு (Piyankara Jayaratne) எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வழக்குகளானது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடர்புடைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மூலமாக 3,000 வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு ரூ.128,520 நஷ்டத்தை ஏற்படுத்தியமை, மாஹவெவ வீஹென நிறுவனத்திற்கு ரூ. 360,000 தொகையை செலுத்துமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகளைத் தூண்டி அந்த தொகையை இழக்க செய்தமை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளை சிலாபத்தில் உள்ள தேசிய சேமிப்பு வங்கியில் உள்ள ஒரு கணக்கில் ரூ. 494,000 தொகையை வரவு வைக்க தூண்டுவதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியமை என முன்னாள் அமைச்சருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...