11 47
இலங்கைசெய்திகள்

சிக்கினார் மற்றுமொரு முன்னாள் அமைச்சர்: தொடரும் விசாரணை

Share

முன்னாள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு (Piyankara Jayaratne) எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வழக்குகளானது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடர்புடைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மூலமாக 3,000 வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு ரூ.128,520 நஷ்டத்தை ஏற்படுத்தியமை, மாஹவெவ வீஹென நிறுவனத்திற்கு ரூ. 360,000 தொகையை செலுத்துமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகளைத் தூண்டி அந்த தொகையை இழக்க செய்தமை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளை சிலாபத்தில் உள்ள தேசிய சேமிப்பு வங்கியில் உள்ள ஒரு கணக்கில் ரூ. 494,000 தொகையை வரவு வைக்க தூண்டுவதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியமை என முன்னாள் அமைச்சருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...