இலங்கைசெய்திகள்

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share
19 14
Share

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக, எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (31) உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு 9 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக விமல் வீரவன்ச உள்ளிட்ட இருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட இருவர் திறந்த மன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
16 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸின் (Texas ) எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

20 5
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து வெடித்த ஏமனின் ஏவுகணை

ஏமனின் ஹவுதிப்படையினாரால் (Houthi ) ஏவப்பட்ட ஏவுகணை, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில்...

17 4
இலங்கைசெய்திகள்

யாழில் முதலில் அவருக்கு கால் வைக்க முடியுமா! கடற்றொழில் அமைச்சர் பகிரங்கம்

அநுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் எனக் கூறுகின்ற நபர் முதலில் தனக்கு கால் வைக்க...

18 4
உலகம்செய்திகள்

பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI படத்தால் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்

தன்னை பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI யால் உருவாக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்ததற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...