tamilnaadi 5 scaled
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வழக்கு

Share

பதில் பொலிஸ் அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக வழக்குத் தொடருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சட்டத்தரணிகளின் சங்கம் சட்டமா அதிபரிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

முன்னாள் இராணுவ சிப்பாயின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்ற அடிப்படையில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட மூவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.

எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுக்கவில்லை. இந்த நிலையிலேயே சட்டமா அதிபரிடம் புதிய கோரிக்கையை சட்டத்தரணிகளின் சங்கம் முன்வைத்துள்ளது.

இந்நிலையில் குறித்த மூவர் மீதும் வழக்கை தாக்கல் செய்யவேண்டியது சட்டமா அதிபரின் கடமை என்று சட்டத்தரணிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...