7 45
இலங்கைசெய்திகள்

கார்களின் விலைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Share

கார்களின் விலைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாட்டில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் இருக்கும் நிதி கையிருப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதரகத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் கடந்த (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி தாமதம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாத வாகன விலை மற்றும் இன்று (25) சந்தையில் கிடைக்கும் வாகன விலைகளை ஒப்பிடும் போது கடுமையான உயர்வு பதிவாகியுள்ளமை அவதானிக்கப்படுகின்றது.

இதன்படி, டொயோட்டா – பிரீமியர் 2017இன் முந்தைய விலை ஒரு கோடியே நாற்பத்தாறு லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

Toyota – Vitz – 2018இன் முந்தைய விலை 80 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 93 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

Toyota – Aqua G 2012இன் முந்தைய விலை 60 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 68 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், Honda – Vessel2014இன் முந்தைய விலை 80 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட தணிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய பல வெளிநாட்டு பணியாளர்கள் அவற்றைப் பெறவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 8cb8563933
செய்திகள்இலங்கை

கண்டி மெததும்பரையில் சோகம்: நிகழ்வின் போது மனநல நோயாளி ஒருவரால் கத்திக்குத்து – 7 பேர் காயம்!

கண்டி மாவட்டம், மெததும்பர (Medadumbara) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அன்று...

HIV 1200px 22 10 26 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரிப்பு: ஆண்களை மையமாகக் கொண்ட தொற்றுகள் உயர்வு – 2009க்குப் பின் உச்சம்!

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்றுகள் கணிசமாக...

1c4025e825b9e5cf5fec4832de98f8c41762857214847193 original
செய்திகள்இந்தியா

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அவசர புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், நாளை...

MediaFile 1 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: திருக்கோவில் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் கல்முனையில் கைது!

திருக்கோவில் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நியூசிலாந்துப் பிரஜை ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத்...