தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரொன்று தீப்பற்றி எரிந்தது: உயிர்ச் சேதமில்லை!

articles2FXpapGgftYDX4DBMrZViq

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை (டிசம்பர் 14) பயணித்த காரொன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. இந்தத் தீ விபத்தில் வாகனம் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளது.

சம்பவம் குறித்த தகவலை வெளியிட்ட பொலிஸார், அதிர்ஷ்டவசமாக, காரில் இருந்தவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். அவர்கள் வாகனத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர்.

அதிவேக நெடுஞ்சாலைப் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு சேவைப் பிரிவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version