25 4
இலங்கைசெய்திகள்

பாடசாலைக்கு கொண்டு வரப்பட்ட உணவில் கஞ்சா பொதிகள்!

Share

கடவத்தை பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் காலை உணவுக்காகக் கொண்டு உணவில் இரண்டு கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது மாணவன் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குறித்த பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இது குறித்து வகுப்பு ஆசிரியருக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னரே விடயம் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து ஆசிரியர் மாணவனின் தாயாருக்கு தொலைபேசியில் அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கியதாகவும், அதன் பின்னர் உணவை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட உணவானது பேக்கரி பொருட்கள் விற்கும் முச்சக்கர வண்டியில் இருந்து வாங்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் பேக்கரி பொருட்களை விற்பனை செய்கிறேன் என்ற போர்வையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேறு ஒரு நபருக்கு வழங்கப்படவிருந்த கஞ்சாப்பொதி அடங்கிய உணவே தவறுதலாக குறித்த மாணவனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....