02canadaletter flag superJumbo scaled
இலங்கைசெய்திகள்

கனேடிய தமிழர்களிடம் இலங்கை அரசு வேண்டுகோள்

Share

இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடாவிற்கான இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள இந்து ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட இலங்கை தூதரக அதிகாரி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கனடாவின் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாகரசபை உறுப்பினர்கள் என 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் உட்பட பெருமளவானவர்கள் இந்த தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தூதரக அதிகாரி, கனடாவில் உள்ள தமிழ்சமூகம் கனடாவின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தில் ஆற்றல்மிக்க சக்தியாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவின் வலுவான தமிழ் வர்த்தக சமூகமும், மிகச்சிறப்பான கல்வியை கொண்டுள்ள இளம்தமிழ் தொழில்துறையினரும் கனடா சமூகத்திற்குள் தமிழ் மக்களை இணைப்பதற்கான உந்துசக்தியாக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அனைத்து சமூகத்தினருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லிணக்க பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடா தமிழ் சமூகம் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என தூதரக அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
google logo
செய்திகள்உலகம்

ஊழியர்களை சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகுள் எச்சரிக்கை!

அமெரிக்க விசா வைத்திருக்கும் தனது ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என கூகுள் நிறுவனம்...

image 42fd4006b9
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளமைக்க யுனிசெப் ஆதரவு: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் முக்கிய சந்திப்பு!

அண்மைக்கால அனர்த்தங்களினால் சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்புகளைச் சீரமைப்பது மற்றும் மாணவர்களின் கல்வியைத் தொடர்வது குறித்து பிரதமர்...

25 69468dc6982f1
செய்திகள்உலகம்

பாலைவன தேசத்தில் பனிப்பொழிவு: சவூதியில் மைனஸ் 4 டிகிரி குளிரால் மக்கள் ஆச்சரியம்!

வெப்பமான வானிலைக்குப் பெயர் பெற்ற சவூதி அரேபியாவில், தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு உலக...

images 5 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெருகலில் மீண்டும் வெள்ள அபாயம்: மகாவலி கங்கையின் நீர்வரத்தால் வீதிகள், குடியிருப்புகள் மூழ்கின!

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசம் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கத்...