02canadaletter flag superJumbo scaled
இலங்கைசெய்திகள்

கனேடிய தமிழர்களிடம் இலங்கை அரசு வேண்டுகோள்

Share

இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடாவிற்கான இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள இந்து ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட இலங்கை தூதரக அதிகாரி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கனடாவின் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாகரசபை உறுப்பினர்கள் என 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் உட்பட பெருமளவானவர்கள் இந்த தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தூதரக அதிகாரி, கனடாவில் உள்ள தமிழ்சமூகம் கனடாவின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தில் ஆற்றல்மிக்க சக்தியாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவின் வலுவான தமிழ் வர்த்தக சமூகமும், மிகச்சிறப்பான கல்வியை கொண்டுள்ள இளம்தமிழ் தொழில்துறையினரும் கனடா சமூகத்திற்குள் தமிழ் மக்களை இணைப்பதற்கான உந்துசக்தியாக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அனைத்து சமூகத்தினருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லிணக்க பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடா தமிழ் சமூகம் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என தூதரக அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...