இலங்கை கனடா
அரசியல்இலங்கைசெய்திகள்

அவசரகாலச் சட்டத்துக்கு எதிராகக் கனடா கண்டனம்!

Share

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானம் குறித்து கனேடியத் தூதுவர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இது நாட்டின் ஜனநாயகத்துக்குக் கிடைத்த பெருமையாகும். அப்படியானால், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானது” எனக் கனேடியத் தூதுவர் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் பாரியளவில் வெடித்துள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகால நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
password 2025 06 20 22 08 58
உலகம்செய்திகள்

தரவுக் கசிவு: 20 கோடிக்கும் அதிகமான பயனர்களின் விபரங்கள் திருட்டு!

உலகில் அதிக பயனர்களைக் கொண்ட ஆபாச இணையத்தளங்களில் ஒன்றான போர்ன்கப் ப்ரீமியம் (Pornhub Premium) பயனர்களின்...

Tamil News lrg 4107099
இந்தியாசெய்திகள்

தொழில்நுட்பத் திருமணம்: கனடா மணமகன் – இந்திய மணமகள்; இணையவழியில் நடந்த வியப்பான நிச்சயதார்த்தம்!

நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கனடாவில் இருக்கும் மணமகனுக்கும், இந்தியாவில் இருக்கும் மணமகளுக்கும் இணையவழியில் (Online) நிச்சயதார்த்தம்...

a 1765959241974 1765959259653
உலகம்செய்திகள்

மெக்சிக்கோ நாடாளுமன்றத்தில் பெரும் ரகளை: உறுப்பினர்கள் ஒருவரையொருவர் முடியைப் பிடித்து இழுத்துத் தாக்குதல்!

மெக்சிக்கோ நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்றின் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு...

news1
இலங்கைசெய்திகள்

மண்சரிவு அபாயத்தில் தெமோதர ‘ஒன்பது வளைவு’ பாலம்: 300 மில்லியன் ரூபா அபிவிருத்தித் திட்டம் தாமதம்!

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட அதிதீவிர வானிலை காரணமாக, இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தெமோதர...