articles2Fy4vlsuAHR6AX2UIg2KXs
இலங்கைசெய்திகள்

இரத்த சோகை மற்றும் தலசீமியா சிகிச்சைக்கு 5.4 இலட்சம் டெஸ்ஃபெரிஒக்சமின் ஊசி மருந்து கொள்முதல்: அமைச்சரவை அனுமதி! 

Share

குருதியை உறையச் செய்யும் இரத்தச் சோகை (Blood Anemia) மற்றும் தலசீமியா (Thalassemia) நோயாளர்களின் உடலிலிருந்து மேலதிக இரும்பை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் டெஸ்ஃபெரிஒக்சமின் மெசிலேட் ஊசி மருந்து பிபீ 500 மில்லிக்கிராம் (500mg) ஊசிமருந்துக் குப்பிகள் 540,000 விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வியாழக்கிழமை (டிசம்பர் 11) இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்முதலுக்காக சர்வதேசப் போட்டியில் விலைமுறிகள் கோரப்பட்டதில், இரண்டு விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய ஒரேயொரு விலைமனுதாரரான இலங்கையின் ABC Pharma Services நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பெறுகையை 791.1 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்காகச் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...

body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...