24 665ea42bcb780
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம்

Share

வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் முற்றாக பாதிப்படைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இது தொடர்பான யோசனையை நேற்று (03) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதனடிப்படையில், எந்தவொரு சுற்றறிக்கையையும் நம்பாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பணத்தின் அளவை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டது.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலக சுற்றாடல் தின கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், நாளைய தினம் நடைபெறவுள்ள உலக சுற்றாடல் தினத்திற்கான தேசிய கொண்டாட்டத்தை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர (Janaka Wakkumbura) மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...