24 665aad62e3b1a
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது

Share

வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சிகரெட் கையிருப்பின் பெறுமதி 3,840,000 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வர்த்தகர் நேற்று (31) இரவு 10:00 மணியளவில் டுபாயில்(dubai) இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-648 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

38,400 சிகரெட்டுகள் அடங்கிய 192 சிகரெட் பொதிகள் அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...