இலங்கைசெய்திகள்

வர்ண வலயங்களாக பிரித்து மாகாணங்களிடையே பஸ் போக்குவரத்து!

777 2
Share

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாகாணங்களையும் வகைப்படுத்தி பஸ் சேவையை ஆரம்பிக்கும் யோசனையை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண குறிப்பிடுகையில்,

கொரோனாப் பரவல் தீவிரமாக அதிக தொற்றாளர்கள் அதிகம் அடையாளப்பட்டுள்ள மாகாணங்கள் சிவப்பு நிறத்திலும் குறைவான தொற்றாளர்கள் பதிவாக மாகாணங்கள் மஞ்சள் நிறத்திலும் தொற்றாளர்கள் இல்லாத மாகாணங்கள் பச்சை நிறத்திலும் அடையாளப்பட்டுள்ளன.

அதன்படி சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுள்ள மாகாணங்கள் ஆசன அடிப்படையில் 50 சதவீதமானோரே பயணிக்கவேண்டும்.

மஞ்சள் நிறத்தில் அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள மாகாணங்களில் 100 சதவீதமானோரே பயணிக்க முடியும்.

பச்சை நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாகாணங்கள் பஸ் சேவையில் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகள் பயணம் செய்யும் நடைமுறையை உள்ளடக்கி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளத்தப்பட்டதன் பின் மாகாணங்களுக்கிடையே போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்த மடியாது. ஆகவே தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...