777 2
இலங்கைசெய்திகள்

வர்ண வலயங்களாக பிரித்து மாகாணங்களிடையே பஸ் போக்குவரத்து!

Share

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாகாணங்களையும் வகைப்படுத்தி பஸ் சேவையை ஆரம்பிக்கும் யோசனையை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண குறிப்பிடுகையில்,

கொரோனாப் பரவல் தீவிரமாக அதிக தொற்றாளர்கள் அதிகம் அடையாளப்பட்டுள்ள மாகாணங்கள் சிவப்பு நிறத்திலும் குறைவான தொற்றாளர்கள் பதிவாக மாகாணங்கள் மஞ்சள் நிறத்திலும் தொற்றாளர்கள் இல்லாத மாகாணங்கள் பச்சை நிறத்திலும் அடையாளப்பட்டுள்ளன.

அதன்படி சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுள்ள மாகாணங்கள் ஆசன அடிப்படையில் 50 சதவீதமானோரே பயணிக்கவேண்டும்.

மஞ்சள் நிறத்தில் அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள மாகாணங்களில் 100 சதவீதமானோரே பயணிக்க முடியும்.

பச்சை நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாகாணங்கள் பஸ் சேவையில் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகள் பயணம் செய்யும் நடைமுறையை உள்ளடக்கி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளத்தப்பட்டதன் பின் மாகாணங்களுக்கிடையே போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்த மடியாது. ஆகவே தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...