11 25
இலங்கைசெய்திகள்

மத்தள விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் முதன்முறையாக தரையிறங்கிய விமானம்

Share

மத்தள விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் முதன்முறையாக தரையிறங்கிய விமானம்

முதன்முறையாக 180 பல்கேரிய(Bulgaria) சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று பல்கேரியாவின் சோபியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று (27ம் திகதி) காலை 9.30 மணியளவில் மத்தள விமான நிலையத்தில்(mattala airport) தரையிறங்கியது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சுற்றுலா அமைச்சுக்கும் ஐரோப்பிய விமான சேவைக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த விமானம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.

கடந்த காலங்களில் மத்தள விமான நிலையம் அவசர தரையிறங்கும் இடமாக மட்டுமே மாறியிருந்தது. எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வாரத்திற்கு 15க்கும் மேற்பட்ட விமானங்கள் மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் வந்து செல்கின்றன.

இதுவரை, மத்தள விமான நிலையத்தைப் பயன்படுத்தி வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா மற்றும் தொடர்புடைய நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

ஆனால் தற்போது ஐரோப்பிய விமான நிறுவனங்களும் சுற்றுலா பயணிகளை மத்தளவுக்கு அழைத்து வருகின்றன. மத்தளவில் இருந்து நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குழு மற்றும் விமான குழுவினரால் மத்தள விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...