1 43
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் பட்ஜெட்: மருத்துவதுறையிலிருந்து கிளம்பும் போர்க்கொடி

Share

முந்தைய எந்த அரசாங்கத்தையும் போலல்லாமல், தற்போதைய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருத்துவர்களை மிகவும் கடினமான நிலையில் வைத்துள்ளதாகவும், மருத்துவர்களின் ஆதரவையும் பெற்ற அரசாங்கம், மருத்துவர்களை கடினமான நிலையில் வைத்துள்ளதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை பணிப்பாளருமான வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனா (Dr. Rukshan Bellana) தெரிவித்தார்.

மருத்துவர்களின் தரத்தை கூட குறைத்து பட்ஜெட்டை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறும் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனா, எந்தவொரு பட்ஜெட்டும் அரசு ஊழியர்களை இவ்வளவு மோசமான சூழ்நிலையில் வைத்ததில்லை என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்(anura kumara dissanayake) அரசாங்கத்தின் நியமனத்தை 80 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் ஆதரித்ததாகவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சுமார் 15 மருத்துவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சட்டத்தின் மூலம் மருத்துவர்களின் மொத்த சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் கூடுதல் சேவை கொடுப்பனவு அடிப்படை சம்பளத்தில் 80வது பங்காகவும், விடுமுறை கொடுப்பனவு அடிப்படை சம்பளத்தில் 20வது பங்காகவும் இருந்ததாகவும், பட்ஜெட்டில் இந்த கொடுப்பனவுகள் முறையே 1 இல் 120வது பங்காகவும், 1 இல் 30வது பங்காகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எந்த வகையிலும் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளருமான வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....

pujitha 1
இலங்கை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை – நீதிமன்றம் அதிரடி.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு , உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு...