24 662606e176ab8
இலங்கைசெய்திகள்

வருவாய் இலக்கை எட்டத் தவறிய இலங்கை: ஆய்வில் தகவல்

Share

வருவாய் இலக்கை எட்டத் தவறிய இலங்கை: ஆய்வில் தகவல்

2024ஆம் ஆண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது வருவாய் மீதான வரவு செலவுத் திட்ட இலக்கை விட குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

இந்த ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை (Budget – 2024) குறித்து வெரிடே (Verité) ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“1991ஆம் ஆண்டிலிருந்து வரவு செலவுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்குக்கான வருவாயை இலங்கை எட்டவில்லை.

அண்மையிலும், வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான நாடாளுமன்றக் குழுவானது வரி வருவாய் 2023இல் வரவு செலவுத் திட்ட இலக்கை விட 13 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்தது.

2024இல், அரசாங்கம் 4,164 பில்லியன் ரூபாய் வருவாயை எதிர்பார்க்கிறது. இது 2023ஆம் ஆண்டிற்கான அதன் திருத்தப்பட்ட கணிப்புகளிலிருந்து 42 சதவீத அதிகரிப்பு ஆகும்.

இருப்பினும், வரவு செலவு அறிக்கையின் நிலை 14 சதவீத பற்றாக்குறையுடன் 3,570 பில்லியன் ரூபாயாக மட்டுமே உள்ளது. உலகிலேயே அதிக வட்டி – செலவு – வருவாய் விகிதத்தை இலங்கை கொண்டுள்ளது.

மேலும், இந்த விகிதத்தை குறைப்பது, பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியமானதாகும்.

இதன்படி, 2024ஆம் ஆண்டின் பாதீடு, இந்த விகிதத்தை 64 சதவீதமாக குறைக்க எதிர்பார்க்கிறது.

எவ்வாறாயினும், இந்த விகிதம் கடந்த சில ஆண்டுகளில் இருந்ததைப் போலவே 70சதவீதத்தினை தாண்டும்.

எனவே, பொருளாதார வல்லுநர்கள் கடன் நிலைத்தன்மையின் முக்கியமான குறிகாட்டியாக கருதும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிய பொருளாதார மீட்சித் திட்டத்தில், இலங்கை வீழ்ச்சியடையும்” என சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
mervin silva 1024x576 1
செய்திகள்அரசியல்இலங்கை

150 மில்லியன் ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக வங்கி அதிகாரிகள் சாட்சியம்!

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் வருமானத்திற்கு அப்பாற்பட்டுச் சொத்துக்களைக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக, முன்னாள் அமைச்சர்...

images 2 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தந்தை தூங்கியபோது கையிலிருந்து நழுவி விழுந்த 2 மாதக் குழந்தை பலி – தந்தை கைது!

அளுபோமுல்ல, படதொப துடுவ பிரதேசத்தில் தந்தையின் கைகளிலிருந்து தவறி விழுந்த இரண்டரை மாதக் குழந்தை, சிகிச்சை...

MediaFile 5 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி நீர் வெளியேற்றும் பணி ஆரம்பம் – நிலத்தை மாற்ற நீதிமன்றம் தடை!

யாழ்ப்பாணம் செம்மணி, சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்...

images 4 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியாவில் சோகம்: மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற உயர்தர வகுப்பு மாணவன் நீரில் மூழ்கிப் பலி!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்...