rtjy 229 scaled
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இரு பௌத்த பிக்குகள்

Share

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இரு பௌத்த பிக்குகள்

ரம்புக்கனை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பௌத்த பிக்கு ஒருவர் மகசீன்கள் (2 T-56)மற்றும் 161 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை நேற்று(19.10.2023) ரம்புக்கனை பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹொரண பௌத்த பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் பிக்கு என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகத்திற்குரிய மாணவ பிக்கு வசிக்கும் விகாரையின் விகாரை மடாதிபதி வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று இரண்டு மகசீன்கள் மற்றும் தோட்டாக்களுடன் மாணவ பிக்குவை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, 850 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், விகாரை வசித்து வரும் மற்றுமொரு பௌத்த பிக்குவும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...