rtjy 229 scaled
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இரு பௌத்த பிக்குகள்

Share

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இரு பௌத்த பிக்குகள்

ரம்புக்கனை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பௌத்த பிக்கு ஒருவர் மகசீன்கள் (2 T-56)மற்றும் 161 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை நேற்று(19.10.2023) ரம்புக்கனை பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹொரண பௌத்த பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் பிக்கு என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகத்திற்குரிய மாணவ பிக்கு வசிக்கும் விகாரையின் விகாரை மடாதிபதி வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று இரண்டு மகசீன்கள் மற்றும் தோட்டாக்களுடன் மாணவ பிக்குவை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, 850 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், விகாரை வசித்து வரும் மற்றுமொரு பௌத்த பிக்குவும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...