25 68eee1ad403f8
இலங்கைசெய்திகள்

குருந்தூர்மலையில் நில அபகரிப்பு: தொல்லியல் திணைக்கள அதிகாரி மீது பௌத்த துறவியே குற்றச்சாட்டு – சாணக்கியன் கடிதத்தை வெளியிட்டார்

Share

குருந்தூர்மலைப் பிரதேசத்தில் திட்டமிட்டுக் காணிகள் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, தொல்பொருள் திணைக்களத்தின் பிரதி அத்தியட்சகராகச் செயற்பட்ட ஜயதிலக்க என்ற பௌத்த துறவியால் இந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டதாக மிஹிந்தலை விகாராதிபதி ஒருவர் கடிதம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், குறித்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இது குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் மிஹிந்தலையில் உள்ள விகாராதிபதியைச் சந்தித்ததாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், விகாராதிபதி தனக்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றையும் அதன் மூலம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) 2025 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் திகதி அளித்த முறைப்பாட்டின் பிரதியையும் வழங்கியதாகத் தெரிவித்தார்.

ஜயதிலக்க என்னும் பிரதி அத்தியட்சகர், பௌத்த மதத்தோடு தொடர்புடைய சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து, அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களிலும் வயல் நிலங்களிலும் வீசியுள்ளார்.

இவ்வாறு வீசப்பட்ட இடங்களை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி, அவற்றைத் திணைக்களத்திற்குச் சொந்தமானதாகக் கையகப்படுத்தியுள்ளார் என்று விகாராதிபதி வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஒரு பௌத்த துறவியே நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டார்.

மேலும், விகாராதிபதியுடனான கலந்துரையாடலின்போது, நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் கட்டாயம் கற்றுக்கொள்வதற்கான ஓர் சட்டமூலத்தைக் கொண்டுவந்து அனைவருக்கும் கற்பிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
buzz
உலகம்செய்திகள்

நாங்கள் ஆறு முறை நிலவுக்குச் சென்றுள்ளோம்: 1969 நிலவுப் பயணம் உண்மையே என நாசா விளக்கம்!

1969 ஆம் ஆண்டு மனிதன் நிலவில் காலடி வைத்த நிகழ்வு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும்...

25 690489b584776
செய்திகள்இலங்கை

தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது விலையுயர்ந்த நாடு

Numbeo வலைத்தளத்தின் தரவுகளின்படி, இலங்கை, தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பில் (SAARC) இரண்டாவது மிகச் செலவுமிக்க...

Jaffna Uni 1200x675px 28 10 25 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேல் மர்மம்: இரண்டு துப்பாக்கி மகசின்கள் மற்றும் வயர்கள் மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இரண்டு துப்பாக்கி மகசின்களும் (Magazines) மற்றும் வயர்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்...

ravi karunanayake1
செய்திகள்இலங்கை

48.8 பில்லியன் செலவில் 1,775 சொகுசு வாகனங்கள் கொள்வனவு: ரவி கருணாநாயக்க கடும் குற்றச்சாட்டு!

அரசாங்கம் உரிய விலைமனு கோரல் இன்றி, 48.8 பில்லியன் ரூபாய் செலவில் 1,775 அதிசொகுசு வாகனங்களைக்...