வெட்டிப் படுகொலை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புத்தளத்தில் சகோதரனும் சகோதரியும் வெட்டிப் படுகொலை!

Share

புத்தளம் மாவட்டம், நவகத்தேகம – முல்லேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லேகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சகோதரனும், 25 வயதுடைய சகோதரியுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

குடும்பத்தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் மூத்த சகோதரர் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்போது கணவன் அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். அதேநேரத்தில் மனைவியையும் கணவன் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான 27 வயதுடைய சந்தேகநபர் காயங்களுக்குள்ளான நிலையில், புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...