18 21
இலங்கைசெய்திகள்

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதிகள் : சிக்கிய பெண்கள்

Share

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதிகள் : சிக்கிய பெண்கள்

கல்கிஸை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த இரண்டு விபசார விடுதிகள் நேற்று(18) சுற்றி வளைக்கப்பட்டு ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை காவல்துறை நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபச்சார விடுதிகள் கல்கிசை கடற்கரை வீதியிலும் மலிபன் சந்திக்கு அருகாமையிலும் செயற்பட்டுவந்துள்ளன.

கைது செய்யப்பட்ட பெண்கள் மாத்தளை, யக்கலமுல்ல, மாவனெல்ல, பெந்தர மற்றும் பாணந்துறை பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 24 மற்றும் 43 வயதுடையவர்கள் ஆவர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...