tamilni Recovered 4 scaled
இலங்கைசெய்திகள்

கனடா மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி

Share

கனடா மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி

பிரித்தானிய மன்னரின் தங்கையான இளவரசி ஆன், குதிரை ஒன்றினால் தாக்கப்பட்டதால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விடயம் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கலாம்.

காயமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, இளவரசி ஆன் ஓய்வெடுக்கவேண்டியிருப்பதால், தான் கலந்துகொள்ளவிருந்த சில நிகழ்ச்சிகளை அவர் தவிர்க்கவேண்டியதாயிற்று.

இளவரசி ஆன் கலந்துகொள்ளவேண்டிய நிகழ்ச்சிகளில் ஒன்று, கனடாவில் நடைபெறவிருந்த, தேசிய போர் நினைவு நாள் நிகழ்ச்சியாகும். போரின்போது வட பிரான்சில் உயிரிழந்த கனேடிய வீரர் ஒருவரின் உடலை கனடாவுக்குக் கொண்டுவரும் அந்த நிகழ்ச்சியில் இளவரசி ஆன் கலந்துகொள்ளவேண்டியிருந்தது.

இளவரசி காயமடைந்ததால் கனடா செல்ல முடியாத நிலைமை ஏற்படவே, அவர் சார்பில், அவர் கனடா மக்களுக்கு அனுப்பிய செய்தியை, கவர்னர் ஜெனரல் வாசித்தார்.

அந்த செய்தியில், 2016ஆம் ஆண்டு தான் கனடாவில் தேசிய போர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை நினவுகூர்ந்துள்ள இளவரசி ஆன், இம்முறை தன்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாததற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

பிரித்தானிய மன்னரான சார்லஸ்தான், கனடா உட்பட 14 நாடுகளின் மன்னர் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
l90920260121101853
செய்திகள்உலகம்

ஜனாதிபதி ட்ரம்பின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: வாஷிங்டனுக்கு அவசரமாகத் திரும்பியது!

சுவிட்சர்லாந்து நோக்கிப் பயணித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force...

25095672 tn8
செய்திகள்உலகம்

காசா அமைதி வாரியத்தில் இணையுமாறு புடினுக்கு ட்ரம்ப் அழைப்பு: சர்வதேச அரசியலில் அதிரடித் திருப்பம்!

காசாவின் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகத்தைக் கவனிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமைதி வாரியத்தில்...

images 6 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக சீரழிவின் மையமாக மாறும் மண்டைதீவு சுற்றுலாத்தளம்: வேலணை பிரதேச சபையில் உறுப்பினர் அனுசியா கடும் எச்சரிக்கை!

உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின்...

images 7 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டிட்வா சூறாவளி அனர்த்தம்: 525 பேருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு!

டிட்வா (Ditwa) சூறாவளி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 525 நபர்களுக்கான மரணச் சான்றிதழ்கள்...