2 24
இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு நாமல் கோரிக்கை

Share

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.

டுபாயில் எமக்கு சொந்தமானது என கூறப்படும் மரியோட் ஹோட்டலை அரசுடமையாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உகண்டாவில் காணப்படுவதாக கூறப்பட்ட பணத்தையும் அரசுடமையாக்குமாறு அவர் கோரியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் ராஜபக்சக்கள் பணம் உழைத்திருந்தால் அவற்றை அரசாங்கம் அரசுடமையாக்க வேண்டுமென கோரியுள்ளார்.

கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க கூறிய பொய்களையே இன்று அனுரகுமாரக்கள் கூறுகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

18 பில்லியன் டொலர் பதுக்கி வைத்திருப்பதாகவோ இல்லை எனவே ரணில் கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மிகவும் தந்திரமான ஓர் அரசியல்வாதி எனவும் அனுரகுமார தரப்பினர் இந்த பொய்களை சமூகத்திற்கு எடுத்துச் சென்று தறபொழுது தடுமாறுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான குவித்த சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு எந்தவொரு ஒத்துழைப்பினையும் வழங்கத் தயார் எனவும், வேண்டுமென்றால் சத்தியக்கடதாசி ஒன்றை வழங்கவும் தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...