2 24
இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு நாமல் கோரிக்கை

Share

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.

டுபாயில் எமக்கு சொந்தமானது என கூறப்படும் மரியோட் ஹோட்டலை அரசுடமையாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உகண்டாவில் காணப்படுவதாக கூறப்பட்ட பணத்தையும் அரசுடமையாக்குமாறு அவர் கோரியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் ராஜபக்சக்கள் பணம் உழைத்திருந்தால் அவற்றை அரசாங்கம் அரசுடமையாக்க வேண்டுமென கோரியுள்ளார்.

கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க கூறிய பொய்களையே இன்று அனுரகுமாரக்கள் கூறுகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

18 பில்லியன் டொலர் பதுக்கி வைத்திருப்பதாகவோ இல்லை எனவே ரணில் கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மிகவும் தந்திரமான ஓர் அரசியல்வாதி எனவும் அனுரகுமார தரப்பினர் இந்த பொய்களை சமூகத்திற்கு எடுத்துச் சென்று தறபொழுது தடுமாறுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான குவித்த சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு எந்தவொரு ஒத்துழைப்பினையும் வழங்கத் தயார் எனவும், வேண்டுமென்றால் சத்தியக்கடதாசி ஒன்றை வழங்கவும் தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1 14
இலங்கைசெய்திகள்

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக...

3 16
உலகம்செய்திகள்

போர்நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து மீள் எழுப்பப்படும் ஓபரேஷன் சிந்தூர் விவகாரம்.. இந்திய அரசியல் தரப்பின் கோரிக்கை

இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித்...

5 16
உலகம்செய்திகள்

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டும் முயற்சி.. ஹமாஸ் விடுத்துள்ள அறிவிப்பு

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய – அமெரிக்க பிணைக்...

4 15
உலகம்செய்திகள்

சீனா – அமெரிக்காவுக்கு இடையில் அதி உயரிய ஒப்பந்தம்.. உலக பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

அமெரிக்கா (US) மற்றும் சீனாவுக்கு (China) இடையில் அதி உயரிய பொருளாதார ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக...